சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் சட்ட வல்லுனர்கள் மூலம் சட்ட பாதுகாப்பு கொடுக்கப்படும்.
சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசாங்கத்திடம் இருந்து கடன் தொகை பெற்றுத்தரப்படும்.
நமது சங்கத்தின் மூலம் அணைத்து உறுப்பினர்களுக்கும் புதிதாக மார்க்கெட் உருவாக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.
சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் மூலம் சந்தா மற்றும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு சங்கத்தின் பெயரில் சொத்துக்கள் வாங்கி பராமரிக்கப்படும் .
சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் லைப் இன்சூரன்ஸ் (Life Insurance) காப்பிட்டு திட்டம் ஏற்படுத்தி தரப்படும் .
சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் இல்லத்தில் ஏதேனும் ஈம காரியங்கள் நடைபெறும் பட்ச்சத்தில் சங்கத்தின் மூலம் ரூ. 1௦௦௦௦ நிதி உதவி அளிக்கப்படும் .
சங்க உறுப்பினர்களுக்கு சங்கத்தின் மூலமாக நகரின் அருகாமையில் உள்ள பகுதில் சுமார் 5 ஏக்கர் சங்கத்தின் பெயரில் நிலம் வாங்கி சங்க உறுப்பினர்களுக்கு தலா 3 சென்ட் விதம் வீடு கட்டுவதற்கு மனை பிரித்து தரப்படும். மேலும் வீடு கட்டுவதற்கு நிதி உதவி பெற்று தரப்படும் .
சங்கத்தின் மூலம் சங்க உறுப்பினர்களுக்கு இயன்ற வரை கடன் உதவி வழங்கப்படும்.